குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
Translation:
Death to the faithful one his embassy may
bring;
bring;
To envoy gains assured advantage for his
king.
king.
Explanation:
He is the ambassador who fearlessly seeks
his sovereign’s good though it should cost him his life (to deliver his
message).
his sovereign’s good though it should cost him his life (to deliver his
message).
கலைஞர் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
[ads-post]
மு.வ உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
மணக்குடவர் உரை:
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது
தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.
தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.
பரிமேலழகர் உரை:
இறுதி பயப்பினும் எஞ்சாது – அவ்வார்த்தை தன்
உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் – தன் அரசன்
சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். (‘இறுதி பயப்பினும்‘ என்றதனால், ஏனைய பயத்தல்
சொல்ல வேண்டாவாயிற்று. இவை
மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)
உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் – தன் அரசன்
சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். (‘இறுதி பயப்பினும்‘ என்றதனால், ஏனைய பயத்தல்
சொல்ல வேண்டாவாயிற்று. இவை
மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)




