HomeUncategorizedThirukural 692 of 1330 - திருக்குறள் 692 of 1330

Thirukural 692 of 1330 – திருக்குறள் 692 of 1330

Thirukural
692 of 1330 –
திருக்குறள் 692 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
Translation:
To those who prize not state that kings are
wont to prize,
The king himself abundant wealth supplies.
Explanation:
For ministers not to cover the things
desired by their kings will through the kings themselves yield them everlasting
wealth.
கலைஞர் உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

[ads-post]
மு. உரை:
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
மணக்குடவர் உரை:
எல்லார்க்கும் பொதுவாகக்
கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக
; அவ்விரும்பைாம
அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்
. அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது
அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது
.
பரிமேலழகர் உரை:
மன்னர் விழைப விழையாமைதம்மால்
சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்
; மன்னரான் மன்னிய
ஆக்கம் தரும்
அமைச்சர்க்கு
அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்
. (ஈண்டுவிழைபஎன்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை
முதலாயின
. இவற்றை
ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே
, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச்
செல்வமும் நல்குவார் என்பது கருத்து
. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments