Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 14401 - 14430 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14401 – 14430 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14401 – 14430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
தேவாதிதேவன் தேவருக்குமூத்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்

விருத்தம்

புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே

விருத்தம்

நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்

விருத்தம்

நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணமயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா

தெய்வ சக்திகளை அய்யா ஐக்கியப்படுத்தல்

விருத்தம்

உரைத்திட மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்

விருத்தம்

சுனையுண்டோ என்றுசொன்னச் சுந்தரபெண்ணேகேளு
கணையுண்டோ அம்புவுண்டோ கலியுகந்தன்னை அழிக்க
இணையுண்டோ நம்மைப்போல யாருமேயில்லை இல்லை

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments