Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 14881 - 14910 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14881 – 14910 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14881 – 14910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கந்தனுடதேவி கனத்ததெய்வானைதனை
இந்தவேளைக்கூட்டி இங்குமணஞ் செய்யவென்று
மாயவரும் கந்தனென மாயவுருவெடுத்து
வேலும்பிடித்து வெண்ணீறும் தான்பூசி
மேளத்தொனியுடனே மேலோர்கள் போற்றிநிற்க
தாளமில்லார் சரமண்டலம் முழங்க
வாசவனும்தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேசநரிளறியத் தெய்வமடவாரறிய
கட்டினார்தாலி கனதெய்வானையர்க்கு
மட்டில்லாதேவர் மனமகிழ்ந்து தாமிருக்க
மாலையிட்டுநாதன் மனைச்சடங்குதான்முகித்து
மூலக்குண்டப்பதியில் முகுந்தனுமே தாமிருந்தார்
ஆகமத் திகனை அலங்கிருத மேப்புரிந்து
நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே
கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று
சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து
கேட்டுநருள்விட்டு கிளிமொழியைத் தான்வருத்தி
கோட்டு வரையான கோதைவள்ளி நாயகியைக்
கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து
எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை
மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே
வேலையிட்டம்மானை வேண்டுஞ் சடங்குசெய்து
நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து
வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து
மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை
தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்
பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்
கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்
வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில்
ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments