Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 14941 - 14970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14941 – 14970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 14941 – 14970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாபரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
அய்யோவைகுண்டர் ஆதிவுரரைத்தபடி
இப்போதொரு சொரூபம் எடுத்துநாம்  போகவென்று
அன்றுயணிந்தாடும் ஆதிவுரு உள்ளடக்கி
மனிதாவர வடிவை மிகவெடுத்து
ஆராதனையாய் அவரொரு ஆட்டமாடி
சீரான சான்றோர்க்குச் சொல்லுவார் வைகுண்டரும்
நன்றுமக்கா இன்று நாமெல்லோரும்கூடி
பண்டுநாம் தவசிருந்த பதிதாமரையூரில்
இன்றுபோக விஞ்சையுண்டு என்கூடவாருமென்றார்
அன்றுமுலப்பதியைவிட்டு ஆதிச்சான்றோர்களெல்லாம்
ஒன்றாகக்கூடி உடையோன் பின்னேநடந்தார்
நன்றுகடற்கரை வழியே நடந்து வருகையிலே
காட்டிலொரு குதிரை கண்டு அய்யாவைப்பணிந்து
நாட்டுக்குவாரேன் நடந்துஉம்மோடுவென்று
முத்திமுகந்துகொண்டு முதுகுகொடுத்திடுமாம்
சித்தமுடனேறி சிலதூரம்வருகையிலே
அந்தரதேவாதி எல்லோருந்தான்கூடி
சிந்தினார்மலரைச் சிவவைகுண்டர் பாதமதில்
தவசிருந்த தாமரைப்பதியூரில் வந்திருந்தார்
மூவர்மொழிந்த மூலப்பதி விஞ்சையைப்போல்
இனியிந்த இவ்வுகத்தில் ஆசையத்த கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments