Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 841 - 870 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 841 – 870 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 841 – 870 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க
ஏராத பாவி இகழ்த்தினா னப்போது
தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்
பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்
ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்
பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை
ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்
நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும்
நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்
சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ
உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே
ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்
நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை
கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்
கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்
தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து
உன்னுடைய சேனை உற்றபடை யழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்
துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments