Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 871 - 900 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 871 – 900 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 871 – 900 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான்
அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்
ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே
போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ
சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு

சூரன்பாடு

சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்
காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை
வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை
சூர னவன்கண்டு தோசப் படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தலைவன் தளமு மிழவாதே
பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே
அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது
நன்மை யதுகூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு
மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்
புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments