Homeஅய்யா வழிஅருள் நூல் 1591 - 1620 of 2738 அடிகள்

அருள் நூல் 1591 – 1620 of 2738 அடிகள்

அருள் நூல் 1591 – 1620 of 2738 அடிகள்

arul-nool

முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ
பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே
சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டிசொல்கின்றேன்
மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது
நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே
வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா
கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன்
ஏகமெங்கும்வெளியாச்சே நளானெங்கேஒளித்திடுவேன்
கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும்
வேதமுத்துஞானமுத்துஉங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து
சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா
பார்தனிலேதான் அடங்கிமக்கள்மனதிலேயேயிருந்துவிட்டேன்
பண்டாரக்கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை
எங்கெங்கே போனாலுமெனக்கிரவுபகல்ஆகுதப்பா
என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்
அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ
தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்வரை
தெளியார்க்குபதேசம் நீசெப்பிரு என்மகனே
இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்
ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்
கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ
கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு
படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள்
அடிப்பார்அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுங்கோ
வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருக்கிறது
என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்
அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments