Homeஅய்யா வழிஅருள் நூல் 1621 - 1650 of 2738 அடிகள்

அருள் நூல் 1621 – 1650 of 2738 அடிகள்

அருள் நூல் 1621 – 1650 of 2738 அடிகள்

arul-nool

அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு
சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச்செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும்
தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ
தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா
நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா
சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே
வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்
உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்
பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா
யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்
அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே
அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ
பஞ்சவர்கள்  அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா
குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்
மந்திரமும் நானானேன்  மருந்துமூலி நானானேன்
சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்
சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்
கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே
துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ
பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி
காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா
யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments