Homeஅய்யா வழிஅருள் நூல் 1681 - 1710 of 2738 அடிகள்

அருள் நூல் 1681 – 1710 of 2738 அடிகள்

அருள் நூல் 1681 – 1710 of 2738 அடிகள்

arul-nool

மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு
ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்
நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா
பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா
நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே
என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே
அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்
பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்
வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே
ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்
அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா
மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு
இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்
அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்
நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்
நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே
முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு
புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே
ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ
இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது
வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே
பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்
நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை
நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை
கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ
கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்
பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்
இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments