Homeஅய்யா வழிஅருள் நூல் 1711 - 1740 of 2738 அடிகள்

அருள் நூல் 1711 – 1740 of 2738 அடிகள்

அருள் நூல் 1711 – 1740 of 2738 அடிகள்

arul-nool

ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ
அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்
துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்
உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா
வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்
ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா
எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா
பிரமன்பகைத்துண்டால் நீங்கள்பேசாமல்போய்வீடுவீர்
விஷ்ணுபகைத்ததுண்டால்வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களைக்
கைபிடியாய் கொண்டுபோவான்
இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா
அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்
நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்
சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ
உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன்
வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே
ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே
சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்
முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments