Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3301 - 3330 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3301 – 3330 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3301 – 3330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத்
தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து
திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments