Homeஎட்டுத் தொகைநற்றிணை 201 - 205 of 400 பாடல்கள்

நற்றிணை 201 – 205 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

நற்றிணை 201 – 205 of 400 பாடல்கள்
201.
குறிஞ்சி
– பரணர்
மலை உறை குறவன் காதல் மட மகள்
பெறல் அருங்குரையள் அருங் கடிக் காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு
அவ் வெள் அருவிக் குட வரையகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே
கழறிய பாங்கற்குத் தலைமகன்
சொல்லியது
விளக்கவுரை :
202. பாலை – பாலை பாடிய பெருங் கடுங்கோ
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்
தேன் செய் பெருங் கிளை இரிய வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல
பல் பூங் கோங்கம் அணிந்த காடே
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச்
சொல்லியது
விளக்கவுரை :
203. நெய்தல் – உலோச்சனார்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கித் தாது சோர்பு
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்
உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே
தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி
சொல்லி வரைவு கடாயது
விளக்கவுரை :
204. குறிஞ்சி – மள்ளனார்
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய் தோழி
கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
விளக்கவுரை :
205. பாலை – இளநாகனார்
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய் நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறிஆயின் இன்றொடு
போயின்றுகொல்லோ தானே படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி
செலவு அழுங்கியது தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments