Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1651 - 1680 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1651 – 1680 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1651 – 1680 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

அப்படியே ஈசர் அன்று படைத்தபடி
இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம்
முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து
அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க
அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய்
மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு
வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை
சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த
தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன்
நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும்
ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம்
தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய்
மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே
ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம்
கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய்
வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான்
இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும்
அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார்
இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம்
தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார்
கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய்
வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும்
சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு
இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே
ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள்
ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து
தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும்
மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி
தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே
வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments