HomeUncategorizedஅகத்தியர் ஞானம் 26 - 30 of 49 பாடல்கள்

அகத்தியர் ஞானம் 26 – 30 of 49 பாடல்கள்


அகத்தியர் ஞானம் 26 – 30 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

26. காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
          காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;        
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
          விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
          குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
          நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;
விளக்கவுரை :
           
27. ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
          உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
          வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
          தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
          அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.
விளக்கவுரை :

[ads-post]

28. பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
          பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
          கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
          தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
          சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.
விளக்கவுரை :
           
29. ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு
          உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி
          நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
          பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்;
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா
          தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே.
விளக்கவுரை :
           
30. உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே
          உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே;  
பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
          பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
          நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
          தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments