HomeUncategorizedஅகத்தியர் ஞானம் 31 - 35 of 49 பாடல்கள்

அகத்தியர் ஞானம் 31 – 35 of 49 பாடல்கள்


அகத்தியர் ஞானம் 31 – 35 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

31. வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
          வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
          தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
          பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
          கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.
விளக்கவுரை :
32. உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
          உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
          உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
          உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
          உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.
விளக்கவுரை :

[ads-post]

33. பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
          பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
          விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
          மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
          பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.
விளக்கவுரை :
34. கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
          காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்       
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
          மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
          சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
          தாயான வத்துவென்றும் பதியின் பேரே. 
விளக்கவுரை :
35. பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
          பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
          பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
          சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
          நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments