HomeUncategorizedபாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 116 - 120 of 129 பாடல்கள்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 116 – 120 of 129 பாடல்கள்


பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 116 – 120 of 129
பாடல்கள்
           
116. ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
          உள்ளும் புறம்பையு மறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே
          ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்கால மில்லாமற் தாணு வோடே
          சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்
தூங்காமல் தூங்கியே சுக மடைந்து
          தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
117. விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
          வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்
          காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
          சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்
          ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
118. காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
          கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
          நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னி லேறி
          மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
          ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
119. மூலத் தலத்திலே நின்ற கருத்தை
          முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
          வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
          பரகதி ஞானசொ ரூபமாகி
ஆலச் சயனத்து மாலுட னின்றே
          ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
120. புலனைந்து வீதியில் வையாளி பாயும்
          புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி
மலபுந்த வுலகங் கடந்த தாலே
          மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்
தலமைந்து பூலோகங் கடந்த தாலே
          சந்திர மண்டலமுங் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
          ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments