Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10411 - 10440 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10411 – 10440 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10411 – 10440 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான்.
ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா
தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே,
இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும்
பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை
ஆராடு நீராடு தீபரணை சாந்தி
காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை
தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம்
தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம்
கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை
குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு
அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக்
குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம்
வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள்
இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில்  செலவிடாமலும்
விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக்
கடவுளிது நாராயண வைகுண்டசாமி
திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி
அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்

விருத்தம்

என்றிந்த விவர மெல்லாம் எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை
பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார்

நடை

நாதன் குருநாதன் நாரா யணநாதன்
மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்
மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்
இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்
மணமான நாதன் மகாபரனைத் தானாடி
வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்
தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments