Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 12391 - 12420 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12391 – 12420 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12391 – 12420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும்
மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப்
பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே
முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே
கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே
வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையே
ஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்க
வையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோ
என்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச்
சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே
பதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்று
குதறி யுலகில் கூச்ச மிகவடைந்து
எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே
சங்கை வழுகாமல் தாமோ தரனுடைய
நினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல்
தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று
போகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப்
பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்து
உத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப்
புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார்
சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப்
பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லி
ஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும்
கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார்
அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்து
இப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால்
நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments