Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1471 - 1500 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1471 – 1500 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1471 – 1500 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார்
வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார்
இப்படியே ராமர் இளைய பெருமாளும்
அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச்
சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய
சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட
மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக்
கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே
கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்

விருத்தம்

நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு
சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர்
வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ
புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன்

நடை

என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே
முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு
அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார்
பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே
இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர
மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா
சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும்
ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments