Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1531 - 1560 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1531 – 1560 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1531 – 1560 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும்
கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை
பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ
மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால்
அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே
இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை
கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே
பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய்
உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி
தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான்
மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய
பகை நானென்று பண்பு மிகக்கூற
அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால்
இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து
நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப்
பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே
அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு
எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும்
எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே
கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே
இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே
சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ
மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ
ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே
கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு
நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ
என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல்
உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே
பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம்
இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments