Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1831 - 1860 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1831 – 1860 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1831 – 1860 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை
அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான்
சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை
அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும்
வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார்
கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்
தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது
வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும்
நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால்
பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே
கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ
இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால்
அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான்
காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப்
பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக்
கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே
அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை
என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments