Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1861 - 1890 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1861 – 1890 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1861 – 1890 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று
வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான்
வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே
தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து
வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச்
சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும்
மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே
கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான்
மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள்
சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும்
எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட

தேவர் முறையம்

நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி
தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட
தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும்
விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி
ஆதியே நாதி அய்யாநா ராயணரே
சோதியே வேதச் சுடரே சுடரொளியே
பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments