Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1951 - 1980 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1951 – 1980 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1951 – 1980 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச்
சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது
தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments