Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2071 - 2100 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2071 – 2100 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2071 – 2100 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட
மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும்
கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத்
தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக்
கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே
தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில்
பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட
முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும்
மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி
விண்டு சொல்லாத விதன மிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார்
பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில்
சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை
மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில்
தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை
கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments