Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9511 - 9540 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9511 – 9540 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9511 – 9540 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார்
உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து
கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே
ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம்
வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம்
நாரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம்

வேறு

நாராயணாதீரா நல்லநாகந்தனில்த்துயில்வாய்
நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம்
சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம்
சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம்
பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம்
பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும்
நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய்
நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு
கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க்
களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க்
குடைபோல் குன்றை யெடுத்தாய்
முப்புர கோட்டை தனையெரித்தாய்க்
கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க்
காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க்
கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய்
மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க்
கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க்
குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க்
கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய்
ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய்
இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments