Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9691 - 9720 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9691 – 9720 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9691 – 9720 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச்
சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை 

திருவாசகம் – 2

ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில்
சத்தி வளைந்ததும் சத்தியிலே சிவம் தோன்றியும்
சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும்
நாதத்தில் விஷ்ணு தோன்றியும் ருத்திரர் மயேசுரர்
உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும்
பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும்
குறோணி வானலோகம் விழுங்கவும்
கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய்
வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில்
குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன
மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும்
தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments