Homeஅய்யா வழிஅய்யா வைகுண்டர் பூமியில் மனு அவதாரம்

அய்யா வைகுண்டர் பூமியில் மனு அவதாரம்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

அய்யா வைகுண்டர் பூமியில் மனு அவதாரம்
1008 – ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற
அவதாரம் என அகிலம் கூறுகிறது.
முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து
யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு
வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை
அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி
, மாயையாக உலகிற்கு
வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும்.
மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின்
வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால்
, நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க
முடியாது. இதனை அகிலம்
, ‘முன்னின்று
கொல்ல மூவராலும் அரிது
என்கிறது.
ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த
வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன்
வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக
, ஒரு பண்டாரத்தை
கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம்
, அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி
செய்யும் வண்ணம் முதன் முதலாக
, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை
சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக
, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.
இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில்
நடக்கிறது.

  • அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).
  • இரண்டாம் நிலை, தூல
    உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன்
    , சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.
  • அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி
    அளிக்கப்பட்டு
    , அவ்வுடலில்
    ஏகம் உலகில் அவதரித்து வருவது.

இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும
உடல்
, ஏகம்
என்னும் காரண உடல்
, இவை
மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக்
குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.
பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை
உட்படுத்தி
, வைகுண்ட
அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு
நாடார்
, வெயிலாள்
தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம்
நோக்கி நடந்தார்.
ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும்
அல்ல
, ஏகப்பரம்பொருள்
மட்டும் அல்ல
, ஆனால்
மற்றொரு புறம்
, மனிதரும்
தான்
, நாராயணரும்
தான்
, ஏகப்பரம்பொருளும்
தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே
செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட
அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம்
, கலியன் வாங்கிய
வரங்களை முறியடிப்பதற்காகவே.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments