Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
குறுந்தொகை 191 – 195 of 401 பாடல்கள்
191.
முல்லை
– தலைவி கூற்று
முல்லை
– தலைவி கூற்று
உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
நோன்சினை யிருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத்
தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதி லாள ரிவண்வரிற் போதிற்
பொம்ம லோதியும் புனையல்
எம்முந் தொடாஅ லென்குவே மன்னே.
– பெயர் அறியப்பட வில்லை
விளக்கவுரை :
192.
பாலை
– தலைவி கூற்று
பாலை
– தலைவி கூற்று
ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி
மின்னின் றூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே.
– கச்சிப்பேட்டு நன்னாகையார்.
விளக்கவுரை :
193.
முல்லை
– தலைவி கூற்று
முல்லை
– தலைவி கூற்று
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்னெடுந் தோளே
இன்று முல்லை முகைநாறும்மே.
– அரிசில் கிழார்.
விளக்கவுரை :
194.
முல்லை
– தலைவி கூற்று
முல்லை
– தலைவி கூற்று
என்னெனப் படுங்கொல் தோழி மின்னுவர
வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கென்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.
– கோவர்த்தனார்.
விளக்கவுரை :
195.
நெய்தல்
– தலைவி கூற்று
நெய்தல்
– தலைவி கூற்று
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
படர்சுமந் தெழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னா திரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச்
செய்வுறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுதல் அறியா தோரே.
– தேரதரனார்.
விளக்கவுரை :




