Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2191 - 2220 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2191 – 2220 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2191 – 2220 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை
கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை
அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான்
அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி
ஈடவி யென்ற எக்காள சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே
நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான்
இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே
கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும்
எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான்
மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும்
தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி
மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி
சீதான உக்கிர சேனனையு மாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments