Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2221 - 2250 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2221 – 2250 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2221 – 2250 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது
சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக்
கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து
செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே
கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும்
திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார்

விருத்தம்

பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச்
சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி
நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே

நடை
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்
இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும்
அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்

ருக்மணி கல்யாணம்

வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை
விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத்
திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து
இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments