Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1891 - 1920 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1891 – 1920 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1891 – 1920 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே
கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக்
கட்டவரு மட்டான கருணா கரக்கடலே
உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே
அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும்
நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே
எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக
ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி
மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே
கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments