Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1921 - 1950 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1921 – 1950 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1921 – 1950 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல்
கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments