Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9721 - 9750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9721 – 9750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9721 – 9750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே
கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு
அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே
தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய
அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து
அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம்
பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென
நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து
அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து
அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே,
அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து
சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித்
தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று
அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து
அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே
பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக்
குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து
கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக்
கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப்
பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப்
பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு
கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய
கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று
ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து
இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து
ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி
ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத்
தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில்
பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி
பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments